If there are any errors in the script or the narration, please send a note to contact@seva.gurukula.com
முன்ன ஒருகாலத்துல...
ஒரு காட்டுல ஒரு நரி இருந்துது. ஒரு நாள் நரிக்கு ரொம்ப பசி. ரொம்ப தாகமும் எடுத்துது.
சுத்தி முத்தி பாத்துது. சாப்பிட எதுவுமே இல்ல. ரொம்ப தூரம் அலைஞ்சு திரிஞ்சு தேடித்து. எதுவுமே கெடைக்கலே.
நரி ரொம்ப களைச்சு போய்டுத்து. அதுக்கு கோவமா வந்துது. தன்னோட இடது பக்கம் பாத்துது. வலது பக்கம் பாத்துது. முன்னால பாத்துது. பின்னால பாத்துது.
அப்ப ஒரு திராட்சைக் கொலைய பாத்துது.
அந்த திராட்சக் கொலை ஒரு கொடியிலேர்ந்து தொங்கிண்டு இருந்துது. நரிக்கு ரொம்ப சந்தோஷம். அது நாக்குல எச்சல் ஊறித்து. அது அந்த திராட்சக் கொலையை எட்டப் பாத்துது. ஆனா அந்த திராட்சைக் கொலை ரொம்ப ஒயரத்துல தொங்கித்து. அதுனால நரி குதிச்சு குதிச்சு அத எட்ட பாத்துது
ஒரு தரம்....
ரெண்டு தரம்...
மூணாம் தரமும்...
மறுபடியும் மறுபடியும் குதிச்சு குதிச்சு பாத்துது. ஆனா திராட்சைக் கொலையோ ரொம்ப ஒயரத்துல இருந்தது. நரியால அத எட்டவே முடியல. நரிக்கு குதிச்சு குதிச்சு வேர்த்து போய் களைப்பாயிடுத்து.
"சீச்சீ இந்த பழம் புளிக்கும்" னு சொல்லிட்டு. வேற உணவத் தேடிண்டு போய்டுத்து.
ஒரு விஷயம் முயற்சி பண்ணியும் கிடைக்கலைன்னா மேலும் அதிகமா முயற்சி பண்ணனும்.